Tuesday, 14th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: வை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூரை சேர்ந்தவர் பிரதீப் (30). லாரி டிரைவர். இவரது மனைவி வனிதா (26). இவர்களது 6 வயது மகள் ரித்னாஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் நேற்று காலை, பிரதீப் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள சந்து ஒன்றில் சிறுமி சடலமாக கிடந்ததை பெற்றோர், உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.
சிறுமியை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். முகம் மற்றும் உடலில் சிறிய அளவில் காயம் இருந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் வனிதா கூறுகையில், `அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அவளுடைய உடலின் மீது ஒரு டீ-சர்ட் போர்த்தப்பட்டுள்ளது. அது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருடையது. எனவே பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது அவர்தான். அவரை கைது செய்ய வேண்டும்’ என்றார்.